Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காவல்நிலையம் அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு பச்சைபெருமாள் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிவக்குமார் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சிவக்குமார் ஆஜராக வந்தார்.
நீதிமன்றம் அருகே காரை நிறுத்திவிட்டு அவர் நடந்து செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், சிவக்குமாரின் உடலை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இது பழிக்கு பழி கொலையாக இருக்கும் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். சிவக்குமார் கொலை செய்யப்பட்ட இடம் அருகிலேயே தென்பாகம் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம் வளாகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.